கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டும்; தல வெயிட்டாக இருக்கக் கூடாது: அஜீத்தை லேசாக சீண்டிய விஜய்?





அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்து கணிப்பு இந்த அளவிற்கு விவாதப்பொருளாக மாறும் என்று அந்த வார இதழே நினைத்திருக்காது. கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமே நடந்து வருகிறது. அஜீத்தே கருத்துகணிப்பில் வென்றார் என்று ஒரு தரப்பும், இல்லை கருத்துகணிப்பில் தவறு நடக்கவில்லை என்று ஒரு தரப்பும் கும்மி அடித்துக்கொண்டிருக்கின்றனர்.


இது தொடர்பாக அஜீத் கூறுகையில்,‘எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டங்களின் மீதெல்லாம் விருப்பம் இல்லை என்றார். ஆனாலும் அவரது ரசிகர்களுக்கு இதை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்  நேற்று முந்தினம் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியது எரியுர நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் இருந்தது.


கமல்ஹாசன், பாலிவுட் ஹீரோ ஷாருக்கான், விஜய், சூர்யா, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ‘விஜய் டிவி அவார்ட்ஸ்’ விருதுகள் வழங்கும் விழா நேற்று முந்தினம்(சனிக்கிழமை) இரவு சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோ விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.‘தலைவா’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு இந்த விருது வழங்கப்பட்டது. தலைவா படத்தை பார்த்த ரசிகர்களுக்கே விருது கொடுக்கனும். அது வேற விசயம்.அந்த விழாவில் பேசிய விஜய் தனது சூப்பர்ஸாடர் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுமின்றி லேசாக அஜீத்தையும் சீண்டி உள்ளார். அவர் பேசியதாவது:-
எனது மனதிற்கு மிகவும் பிடித்த படம் ‘தலைவா’. நன்றாக போயிருக்க வேண்டிய படம்.ஆனால் சில சூழ்நிலைகளால் அந்த படம் சரியாக போகவில்லை. எனக்கு முதலில் கொடுத்த இளைய தளபதி பட்டமே போதும். அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது மிகப்பெரிய அங்கீகாரம் தான்.சினிமாவில் எனக்கும் ஓர் இடம் வேண்டும் தான் ஆசைப்பட்டனே தவிர, கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை. கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் தல வெயிட்டாக இருக்கக் கூடாது.அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் படத்தில் அவருடைய ஸ்டைல் கமர்ஷியல் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.


தல வார்த்தையை விஜய் கூறியதும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அடடே ரொம்ப பேசிட்டோம்போல என நினைத்தாரா என்னமோ  உடனடியாக மேடையை விட்டு இறங்கினார் விஜய்
ஏற்கெனவே இவர் புதிய கீதை என்ற  படத்தில் யாருடா இங்க தல என்று பஞ்ச் வசனம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் எடுக்க தயார் என்ற முருகதாஸே இந்த சம்பவங்களை பார்க்கையில் யோசிக்கத்தான் செய்வார் இது சாத்தியமா என்று.